Have a nice day readers...!!!

Sunday, July 22, 2012

குட்டி குறும்பு [4] - நானும் வரேன் பரீட்சைக்கு...

இரு மாதம் முன்பு, அத்தை ஒரு நாள் காலை சென்னை வந்ததும், ஒரே சந்தோஷம் மருமகனுக்கு. அத்தை நாம விளையாடலாமா என்று கேட்டான். பரீட்சைக்கு போயிட்டு வந்து உன்கூட விளையாடுறேன் கண்ணு என்று சொன்னதும். அப்போ நானும் உன்கூட பரீட்சைக்கு வரேன் என்றான். உடனே அத்தை , சின்ன பசங்க எல்லாம் பரிச்சைக்கு வர கூடாதுன்னு சொன்னங்க தம்பி என்றார். உடனே "ஏன் ?" என்று தாணு கேட்க , அவங்க அப்பா , அத்தைக்கு கேள்விக்கு பதில் எல்லாம் சொல்லி கொடுத்திருவ இல்ல , அதனால தான் என்றார்.

தாணு அதற்கும் அசராமல் , அத்தை நான் உனக்கு சொல்லி கொடுக்காம , அமைதியா உன் மடியிலேய உட்கார்ந்துகிறேன் , என்னையும் கூட்டிட்டு போ என்றான்.. பாவம் அவன், அத்தை அப்பாக்கு தான் சங்கடமா போச்சு. சின்ன பிள்ளைகள் வரகூடாது, பிடித்து வைத்து கொள்வார்கள் என்று சமாளித்து பரீட்சைக்கு சென்றார்கள்...

-- தானேஷ் அம்மா

No comments:

Post a Comment