Have a nice day readers...!!!

Thursday, August 26, 2021

படம் பார்த்து கவிதை எழுது

 



கரும்  புகை 


வீட்டின் கூரையிலே 
ஆலையின் குழாயினிலே 
வரும் கரும் புகையே 

வானின் மேகங்களையே 
குறிவைத்து செல்கிறாயே 
மழையை விஷமாக மாற்றுகிறாயே 

உன் விஷத்தை அழிக்க 
மனிதர்கள் போராடினரே 
ஆனால் உன் விஷம் போகவில்லையே 

உன் விஷத்தை அழிக்க 
உன்னை அழித்தால் போதுமே 
நீ அழிந்து விட்டாய் என்றால் 
வானும் நிலமும் பொன் நிறம் ஆகுமே 

-- தானேஷ் அம்மா 

குறிப்பு : தானேஷ் எழுதியது 

Tuesday, August 10, 2021

படம் பார்த்து கவிதை எழுது

 





அலை கடலே 

அலையே கடலலையே 
ஆரவார  கடற்கரையே 

பொங்கும் கடலே 
போராட்டக் களமே 

அஞ்சோம் நாமே 
அரவணைத்தோம் சேர்ந்தே 

வெல்வோம் ஒன்றிணைந்தே 
வெற்றி எமதே 

-- தானேஷ் அம்மா