Have a nice day readers...!!!

Monday, December 17, 2012

குட்டி குறும்பு [10] - அம்மா ரேகை உடைஞ்சு போச்சு...


தானேஷுக்கு கொஞ்சம் பயம் அதிகம், அதுவும் ரத்தத்தை பார்த்தால் அழுதுடுவாரு. ஒரு தடவை உள்ளங்கையில் ஒரு சின்ன கீறல் காயம். மருந்து போட்டு சமாதானம் செய்தோம்.  அடுத்த நாள் மறந்துட்டாரு. அதற்கடுத்த நாள் , அழுகிற மாதிரி முகத்தை வச்சுட்டு என்கிட்ட ஓடி வந்தாரு.

என்ன ஆச்சு என்றதும் , அழு குரலில் " அம்மா ரேகை உடைஞ்சு போச்சு..." என்றான். எங்க காமி என்றதும் உள்ளங்கை விரித்து கட்டினார். அந்த காயம் சரியாகி , பழைய தோல் ஒரு நூல் போல எழுந்து நின்றது.

கையில் இருக்கும் லைன் என்னவென்று கேட்டதற்கு , ரேகை என்று சொல்லி கொடுத்ததை வைத்து, தோல் உரிவதை பார்த்தது இல்லாததால் ரேகை உடைஞ்சு போச்சு என்று சொல்லி எங்க எல்லாரையும் சிரிக்க வச்சுட்டான்.

-- தானேஷ் அம்மா

1 comment:

  1. This incident happened couple of years back. Now he is bold that, he does not even inform us when he gets injured.

    ReplyDelete