லீவில் ஊரில் இருந்த  போது , தானேஷ் , பாட்டியிடம் "பாட்டி உன் வயசு என்ன ?"  என்று கேட்டான் .
நான் ஆர்வமாக இருந்தேன் . அம்மா என்ன பதில் சொல்வார்கள் என்று. உடனே பதில் வந்தது. "பொண்ணுங்க  கிட்ட வயசு  கேட்க கூடாது " 
உடனே நான் தாணுவிடம், அம்மா வயசு உனக்கு தெரியும் இல்ல என்றேன் . ஆமாம் என்றான்.
நான் பிறந்த போது பாட்டி வயசு முப்பது. இப்போ என் வயசையும் , பாட்டியின் அந்த வயதையும் கூட்டினால் , பாட்டியின் வயசு தெரியும் என்றேன் .  தாணு நோட்டு பென்சில்  எடுத்து கணக்கு போட்டு கண்டு பிடிச்சிட்டான்.
உடனே, யாரு  கேட்டாலும் , அம்மா,  பாட்டி வயசு சொல்லக்கூடாது சரியா என்றேன்.
ஷப்பா, பேபியானாலும்  பாட்டியானாலும் பொண்ணுங்க  பொண்ணுங்க தான் .
-- தானேஷ் அம்மா
 
No comments:
Post a Comment