Have a nice day readers...!!!

Saturday, June 30, 2012

குட்டி குறும்பு [3] - வயிறு என்கிட்டே சொல்லுச்சு...

தானேஷ் , தீபக்  ரெண்டு பேருக்கும், டிபன் அல்லது சாப்பாடு என்றால் ரொம்ப கஷ்டமான ஒன்று. அதே நொறுக்கு தீனி என்றால் ரொம்ப இஷ்டம்.

தீபக் இன்னும் பேச ஆரம்பிக்க வில்லை. அதனால் சாப்பாடு என்றால் வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளும். ஆனால் தானேஷ் , சமத்தாக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போதும் என்பான். இன்னும் கொஞ்சம் சாப்பிடு என்றால் வயறு புல்ல் என்பான்.


அப்போ பிஸ்கட் , ஸ்நாக் கேக்க கூடாது என்றால் , தலைய குனிந்து வயிற்றின் கிட்டே வைத்து பின் நிமிர்ந்து , அம்மா வயிறு என்கிட்டே சொல்லுச்சு , தோசை சாப்பாடுக்கு உள்ள இடம் இல்லியாம். ஸ்நாக் அப்புறம் தண்ணி குடிக்க மட்டும் கொஞ்சம் இடம் இருக்காம். அதனால கொஞ்சம் ஸ்நாக் அப்புறம் தண்ணி கொஞ்சம் ஓகே வா அம்மா ? என்றான். நான் அவனை ஓர கண்ணால் பார்த்து சிரித்ததும் , ஓகே சொல்லு அம்மா என்றான். பதில் சொல்லும் வரை விட மாட்டான். அதனால் ஓகே சொல்லி விட்டேன்.


-- தானேஷ் அம்மா

No comments:

Post a Comment