Have a nice day readers...!!!

Sunday, March 17, 2013

நிலா சிநேகம்

மழலை பருவத்தில் அன்னை
அறிமுகம் செய்தாள் உன்னை

நிலா என்று சொல்லி அமுதூட்டினாள்
நம் சிநேகம்  ஆரம்பித்தது அன்று

ஆதவனிடம்  இருந்து  இரவல் வாங்கி
அம்புலி நீ அழகாய் தோன்றினாய் 


தனிமை மறக்க என்னுடன் நடந்தாய்
என்னை மகிழ்விக்க கண்ணாமூச்சி ஆடினாய்

சில நாள் கோபம் கொண்டு
சந்திக்க மறுப்பாய்

சில நாள் மகிழ்ச்சி  கொண்டு
முழு மதியாய் சிரிப்பாய்

இன்றும் அதே சிநேகத்துடன்
என் மகனுடன் நீ... 


-- தானேஷ் அம்மா 

1 comment: