Have a nice day readers...!!!

Wednesday, January 7, 2015

குட்டி குறும்பு [14] - எனக்கு மீசை வேணும்



இந்த குறும்பு தீபக் செய்தது. அப்பா மாதிரியே தானும் பேன்ட் ஷர்ட் போடணும். பாக்கெட்ல பேனா வச்சுக்கணும் . கூலிங் கிளாஸ் போடணும்னு சேட்டை தான்.

ஒரு நாள் இரவு தூங்க செல்லும் முன், தானேஷ் அப்பா , தீபக்கிற்கு முத்தம் கொடுத்தாரு. அப்பா முகத்தையே உற்று பார்த்தவன் , அழ ஆரம்பிச்சுட்டான். ஏன் தம்பி அழற என்று கேட்டதற்கு அழுதுகொண்டே "அப்பா கிட்ட இருக்க மாதிரி எனக்கு இது இல்லைன்னு " மீசையை தொட்டு காண்பித்தான். 

அதன் பெயர் கூட தெரியாது. எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இது மீசை. நீ வளர்ந்ததும் வரும். அண்ணாக்கும் இல்லை பாரு என்றோம்.
சமாதானம் ஆகி தூங்கினான். அடுத்த நாள் காலை , அப்பாவிடம் ஓடி , தொட்டு காட்டி இது பேர் என்ன என்றான். மீசை என்றதும், மறுபடி எனக்கு மீசை வேணும் புராணம் ஆரம்பித்தான். நீ வளர்ந்ததும் வரும் என்றோம். இப்பவே வேணும் என்றான்.  என் மீசையை எடுத்துக்கோ என்றதும் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். உடனே விலகி, இது வராது , நீ வளர்ந்ததும் உனக்கும் வரும் என்றார். அவனை சமாதனப்படுத்த, மை பென்சில் மூலம் மீசை வரைந்து கண்ணாடியில் பார்க்க சொன்னோம். அது அவனுக்கு பிடிக்க வில்லை.அழிக்க சொல்லி விட்டான்.

ஒரு வாரம் முழுதும் அப்பாவை பார்க்கும் போது  , எனக்கு மீசை வேணும் என்பது கண்டிப்பாக இருக்கும். ஒரு வழியாக பின்னர் அந்த கேள்வி நின்றது.

-- தானேஷ் அம்மா

No comments:

Post a Comment