Have a nice day readers...!!!

Thursday, March 12, 2015

wire bag



Recently I came across an advertisement online, where a hand bag got my attention. I was surprised as the bag looked just like the wire bag which was used in household for normal market shopping during my childhood.



However, I could not locate this handbag in the shopping Not sure if this bag was made of the wire or some other fabric painted in this way.

My mother used to buy the wires and make the wire bag and my father had used it for taking his lunch to office in that bag.

-- Dhanesh Amma

Thursday, February 5, 2015

What an idea sir ji...



Recently when we were back to home in bike with kids, a crow pooped on Dhanesh hand and on his pants. As we were very near to our home, we asked him to stay as such. We washed him on reaching home.

After a few minutes, Dhanesh came to us and asked, Why this crow did this way on road. It can go in toilet in its home right ? I replied him that Trees are their home and it does not have toilet in its nest. It just goes and some times it goes while flying too.



In our country not all houses have toilets and vidya balan madam is requesting everyone to construct toilet in home for hygine and not to use public places. 


Suddenly our junior came and said, the crow could have worn pampers, so that it would not have fell on his brothers hand.



How kids relate and talk?? Imagine a diaper for all birds.. I could not stop laughing..

--Dhanesh Amma.



Friday, January 30, 2015

Craft Work - 8


We were asked to prepare Hat in Deepak School. Below is the hat made out of chart paper. 


On seeing the hat, Dhanesh also wanted to prepare one himself. So another one made by him, with some help from me.


--Dhanesh Amma.


Thursday, January 8, 2015

வாசல் கோலம் - பகுதி இரண்டு




மார்கழி மாதம், பனிக்காலம். அந்த அதிகாலை பனி உடலுக்கு நல்லது என்று, இந்த கலர் கோலம் போடும் வேலை போல. ஆண்களை போன்று பெண்கள் வெளியே செல்வது இல்லை .அதனால் வீட்டு வாசலில் அவர்களை கொஞ்சம் அதிக நேரம் இருக்க வைக்க ஆரம்பிக்கப்பட்டதாக இருக்கும். 

அந்த மாதம் மட்டும் அப்பாவை ஐந்து மணிக்கு எழுப்பி விட சொல்லி , கலர் கோலம் போடுவோம். பனியில் அந்த கொசு கடியில் வேலை நடக்கும். முடிந்தும், தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சென்று கோலம் பார்த்து அதில் பிடித்த கோலத்தை மனப்பாடம் செய்து, வீட்டிற்கு வந்ததும் கோல நோட்டில் போட்டு வைத்து  பின்னர் ஒரு நாள் வாசலில் போடுவோம். 

வருடம் செல்ல செல்ல , பனி அதிகமாக உள்ளது, கொசு கடி என்று சொல்லி காலை கலர் கோலம் இரவு கலர் கோலம் ஆனது. பல நேரம் பெரிய கோலம் போட அம்மாவை தான் கூப்பிடுவேன், கலர் அடிக்க நேரம் ஆகும் என்று காரணம் சொல்லி.

கலர் கோலம் 

கல்லூரி படிப்பு முடிந்ததும் இந்த தினக் கோலம் ,மார்கழி  கலர் கோலம் போடுவது  எல்லாம் கை விடப்பட்டது.  முந்தைய பதிவில் சொன்னது போல என்றாவது கோலம்  போடுவது தான். பிறந்த, புகுந்த வீட்டிலும் கலர் அடிப்பது (பண்டிகை போது ) மட்டுமே. சென்னையில் நான் கலர் கோல பொடி இது வரை வாங்கியது இல்லை.

ஆனால் இந்த வருடம், தானேஷ் விரும்பியதால் , கலர் கோல மாவு வாங்கி மாலையில் வீட்டு வாசலில் போட்டோம். வழக்கம்  போல மாடி வீட்டம்மா தான் கேட்டது. காலையில் கலர் கோலம்  போடாம , சாயந்திரம் போடுறன்னு. கேள்வி கேட்கும் அம்மா வீட்டிலேயே  சில நாள் ராத்திரி வாசல் பெருக்கி மாவு கல் அல்லது சாக் பீஸ் கோலம் போடுவாங்க. நான் பதில் கேள்வி கேட்கவில்லை. 

வாசகர்கள் பார்வைக்காக எங்கள் வீடு கோலம் 




என்னுடைய கை வண்ணத்தில் (சிகப்பு நிறம் தானேஷ் செய்தது )



தீபக் , தானேஷ் வண்ணம் தீட்டியது 

நானும் பெரிய கோலம் போட்டிருக்கேன் என்பதை காட்ட ஏதும் புகைப்படம் இல்லை. அப்பொழுது எங்கள் வீட்டில் கேமராவோ , கேமரா போனோ  கிடையாது. 


கோலம் போடுவதும் , கலர் கோலம் போடுவதும் எனக்கு பிடிக்கும் தான். ஆனால்  அதற்காக அதை என்னுடைய தினசரி கட்டாய வேலையாக அல்லது கடமையாக ஏற்க மனம் வருவது இல்லை. வாசலில் கோலம் இருந்தா தான் சாமி வீட்டுக்கு வரும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாசல்  பெருக்கி , கழுவுவதோடு சரி. எனக்கு தோன்றும் தினங்களில் மற்றும் விஷேச நாட்களின்  போது கோலம் போடுவேன். 

இந்த சென்னையில் என்னை கேள்வி கேட்பார் இல்லை. ஒரு வேளை பின்னாளில் நான் ஊர் பக்கம் நிரந்தரமாக  தங்குவதாக இருந்தால், ஊருக்காக தினமும் கோலம் போடலாம்.

வாசல் கோலம் பதிவு நிறைவு பெற்றது 

-- தானேஷ் அம்மா 





Wednesday, January 7, 2015

குட்டி குறும்பு [14] - எனக்கு மீசை வேணும்



இந்த குறும்பு தீபக் செய்தது. அப்பா மாதிரியே தானும் பேன்ட் ஷர்ட் போடணும். பாக்கெட்ல பேனா வச்சுக்கணும் . கூலிங் கிளாஸ் போடணும்னு சேட்டை தான்.

ஒரு நாள் இரவு தூங்க செல்லும் முன், தானேஷ் அப்பா , தீபக்கிற்கு முத்தம் கொடுத்தாரு. அப்பா முகத்தையே உற்று பார்த்தவன் , அழ ஆரம்பிச்சுட்டான். ஏன் தம்பி அழற என்று கேட்டதற்கு அழுதுகொண்டே "அப்பா கிட்ட இருக்க மாதிரி எனக்கு இது இல்லைன்னு " மீசையை தொட்டு காண்பித்தான். 

அதன் பெயர் கூட தெரியாது. எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இது மீசை. நீ வளர்ந்ததும் வரும். அண்ணாக்கும் இல்லை பாரு என்றோம்.
சமாதானம் ஆகி தூங்கினான். அடுத்த நாள் காலை , அப்பாவிடம் ஓடி , தொட்டு காட்டி இது பேர் என்ன என்றான். மீசை என்றதும், மறுபடி எனக்கு மீசை வேணும் புராணம் ஆரம்பித்தான். நீ வளர்ந்ததும் வரும் என்றோம். இப்பவே வேணும் என்றான்.  என் மீசையை எடுத்துக்கோ என்றதும் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். உடனே விலகி, இது வராது , நீ வளர்ந்ததும் உனக்கும் வரும் என்றார். அவனை சமாதனப்படுத்த, மை பென்சில் மூலம் மீசை வரைந்து கண்ணாடியில் பார்க்க சொன்னோம். அது அவனுக்கு பிடிக்க வில்லை.அழிக்க சொல்லி விட்டான்.

ஒரு வாரம் முழுதும் அப்பாவை பார்க்கும் போது  , எனக்கு மீசை வேணும் என்பது கண்டிப்பாக இருக்கும். ஒரு வழியாக பின்னர் அந்த கேள்வி நின்றது.

-- தானேஷ் அம்மா

வாசல் கோலம்


காலை , மாலை ரெண்டு வேளையும் வீட்டு வாசலில்  கோலம் போடுவதை தமிழ் நாட்டில, பல வீடுகளில் இன்னைக்கும் ஒரு கடமையா செய்து வருகிறார்கள் 

எனக்கு  தெரிந்து வாசல் கோலம் இரு வகை . புள்ளி வைத்தது , புள்ளி வைக்காதது. புள்ளி  வைத்த கோலம், மேலும் இரு பிரிவு கொண்டது. சிக்கு கோலம் மற்றும்  பூ அல்லது படக் கோலம் 

புள்ளி வைக்காத கோலம் 

புள்ளி வைத்த கோலம் (சிக்கு கோலம் )

புள்ளி வைத்த கோலம் (படக்  கோலம் )


புள்ளி வைத்த கோலத்திலும்  நேர் புள்ளி ,ஊடு புள்ளி என்று இரு வகை கோலம் உண்டு.

 கோலத்துக்கும் எனக்கும் ஒரு காலத்தில் (பள்ளி  பருவத்தில் ) சம்பந்தம் இருந்தது. கோல  புத்தகம் , கோல நோட்டு கையுமா  இருந்திருக்கேன். கொஞ்ச காலத்திற்கு தினமும் காலை மாலை என இருவேளையும் வாசலில் கோலம் போடுவது என் கடமைகளில் ஒன்றாக இருந்தது. 

பாக்யராஜ் சார் படத்தில தாங்க , வயசு பொண்ணுங்க குளித்து , பளிச்சுன்னு உடை மற்றும் தலை கொண்டை (மறக்காம கொண்டைய சுத்தி துண்டு ) போட்டு காலை ஐந்து மணிக்கே கோலம் போடுவாங்க. அந்த கோலத்தை பார்க்க பார்க்க ஹீரோ(?) வருவாரு, அதுவும் சைகிளில்.அதை பத்தி பேச ஆரம்பிச்சா தலைப்பு மாறி போயிடும். கோலத்துக்கு வருவோம்.

என்னுடைய காலை கோலம்  என்றால் , ஐந்து மணி எல்லாம் கிடையாது. பல நேரம் அது ஏழு மணியாக தான் இருக்கும். பல பேருக்கு அது பள்ளி கூடம் அல்லது வேலைக்கு செல்லும் நேரம். அவர்கள் நான் கோலம் போடுவதை பார்க்கும் போது, கோவமாக வரும்.அனாலும் என்னால் சீக்கிரம் எழுந்து , குளித்து ரெடியாகி கோலம் போட முடிந்தது இல்லை. 


கோலம் போடு என்று என் அம்மா சொன்னால் , அது மூன்று உள் வேலை  கொண்டது. வாசல் பெருக்க (விளக்கமாறு  / துடைப்பம் கொண்டு  கூட்டுதல் ), நீர் தெளித்து கழுவுதல் , கோலம் போடுதல்.

 லீவில்  ஊருக்கு  போனா  பாட்டி , "முத்தம் தெளிச்சியா?" ன்னு கேட்பாங். ஊருக்கு ஊரு இந்த பேச்சு மாறும். இன்னமும் நாகர் கோவில் பக்கம் எல்லாம் இப்படித்தான் கேப்பாங்க. உண்மையில் முற்றம் (வாசல்) என்னும்  வார்த்தை  தான் கால போக்கில் மாறி முத்தம் ஆயிற்று. 


சென்னை வந்ததும் , ஒரு அம்மா வந்து கேட்டது. "முறை வாசல் செய்ய ஆள் வேண்டுமா ? " எனக்கு புரிய வில்லை. அப்படின்னா என்ன என்று கேட்டேன். காலை மாலை இரு வேலையும் கோலம் போடுவதை தான் முறை வாசல் என்று சொல்கிறார்கள் என்று விளக்கம் அறிந்தேன். "முறை  வாசல்"  என்பது "முத்தம் தெளித்தல்" என்பதை விட தேவலை என்று தோன்றியது. 

நாகர்கோவிலின் சுத்த தமிழ் கால போக்கில் கலப்படம் ஆனதை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்.

அந்த காலத்தில் பச்சை அரிசி மாவில் கோலம் போட்டதாக சொல்கிறார்கள். நான் கோலம் போட்டது சுண்ணாம்பு கல்லில் இருந்து பொடி செய்யப்பட்ட மாவில் தான். மண்ணில் இருக்கும் எறும்பு போன்ற ஜீவன்களுக்காக பச்சை அரிசி மாவு  கலந்து மண் தரையில் கோலம் போடுபவர்களும் உண்டு.ஆனால் இப்பொழுது பல வீடுகளில் வாசல்  சிமெண்டு தரை தான். மொசைக் தரையாக இருப்பின் பலர் கோலம் பெயிண்ட் செய்து விடுகிறார்கள் அல்லது கோல  ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி விடுகிறார்கள்.


இன்றும் , நாங்கள் குடி இருக்கும் வீடும், தெருவில் இருந்து  உள்ளே இருப்பதால் நான் கோலம் போடுவது இல்லை. தோன்றினால் சில நேரம் மாலையில் போடுவேன். கோலம் போட்டு பழக்கம் இருந்தாலும் என்னுடைய கோலங்கள் என்றும் முழுமையான திருத்தத்துடன் இருந்ந்தது இல்லை. நோட்டில் போடுவது போன்று அழகாக வந்தது இல்லை. அதுவும் நான் கோலம் போட தயங்க காரணம்.  

சென்னையில் பல வீடுகளில் கோலம் போடுவது "அவுட் சோர்ஸ்" செய்யபடுகிறது. எனக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஏனெனில்  எங்கள் வீட்டிலேயே பாத்திரம் விளக்கும் அம்மாவிடம் அந்த வேலை பின்னர் கொடுக்கப்பட்டது. நான் சந்தோஷம் அடைந்த நேரம் அது . பலர் பார்க்க ஏழு மணிக்கு கோலம் போட தேவை இல்லை. இருந்தும் மார்கழி மாதம் முழுவதும் கோலம் போடுவது எங்களுடையது. 

இந்த பதிவு  மிக நீளமாக போவதால் மார்கழி கோலம் பற்றிய பதிவை அடுத்ததாக, வாசல் கோலம் - பகுதி இரண்டு - ஆக  போடுகிறேன்.

-- தானேஷ் அம்மா

Video Games -part 2

When I wrote the post Video Games I did not expect that , I would land up writing part 2 for it.

The need for part 2 came , when I came across some of the games in play store in my android phone. Some of the games which I have played in child hood as board and real games have come today as mobile app.

Before the arrival of mobile games , I had come across only chess game in computer

I used to play the chess board game with my dad, sister and some neighbors

When I started playing Dos and Windows game in my home PC, I  got chess game. I used to compete against the computer in chess game. I had enjoyed playing when there is no one to play chess with me.



Now the chess game is also available in android app.
https://play.google.com/store/apps/details?id=uk.co.aifactory.chessfree&hl=en

Some of my child hood games with its name and images also have come in mobile app.



Aadu-puli-attam (goat , tiger game). I have not played much in this game. I don't remember how to play this game now. May be I will re-collect when some one tells me how to play.

https://play.google.com/store/apps/details?id=visu.suni.snakesandladders10by10&hl=en

Brainvita game. I have enjoyed playing this game. After several attempts , I had won this game by reaching to one marble.

https://play.google.com/store/apps/details?id=org.elevate&hl=en


Chinese Checkers. I have not got chance to play this game with six players, Only I have played as 2 player game.

https://play.google.com/store/apps/details?id=com.sohomob.android.chinese_checkers

Pallanguzhi (Bantumi) game. My mother got us a similar fish shaped one as stated in this picture. 
Enjoyed playing with it as single player / two player.

https://play.google.com/store/apps/details?id=atomicpineapple.bantumi.free&hl=en

Snake and Ladder game. There were several version of the game. But my favourite version is this. Having a Lengthy snake in box number 99 and which comes down to box number 5. If we hit on the box 99 , we have to make our journey again from box number 5. Some of the player withdrew from the game if they see that they land up on this box number 99.

https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.ludov2.free&hl=en


Scrabble: Word building game.

https://play.google.com/store/apps/details?id=com.ea.game.scrabblemattel_bv&hl=en

The only benefit with the mobile games is that, it does not require additional player. The mobile takes care of it. Since I have played these games in real, I do not like to play them in the app.

There could be other games in mobile which we played in childhood too but the above listed are the ones which I remember right now.

-- Dhanesh Amma